ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 13 - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 16 December 2017

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான வினா-விடை - 13

* தமிழில் ஓரெழுத்து ஒருமொழி 42 உள்ளன.
* பகுத்தல் என்பதன் பொருள் பிரித்தல்
* பதம் இரு வகைப்படும். பிரிக்கவியலாத சொல் பகாப்பதம், பகுக்க இயலும் சொற்கள் பகுபதம் என்பர்.

* பகாப்பதம் நான் வகைப்படும்.
* பகுப்பதம் இரு வகைப்படும்.
* பகுபத உறுப்புகள் ஆறு.
* பகுபதத்தில் அவசியம் இருக்க வேண்டியவை பகுதி, விகுதி
* இடைச்சொற்கள் பகாப்பதம் ஆகும்.
* ஏவல் வினையாக அமைவது வினைப் பகுபதம் ஆகும்.
* கண்டிலன் என்பதில் அமைந்துள்ள இடைநிலை - இல்.
* பெயர் பகுபதம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறன் அடியாகத் தோன்றும்.
* காலம் காட்டும் இடைநிலைகள் மூன்று.
* வழக்கு என்பதை மரபு என்றும் கூறுவர். வழக்கு இரு வகைப்படும்.
* இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். இல்முன் என்பதை முன்றில் எனக் கூறுவது.

இலக்கணப்போலி
* இறந்தவரைத் துஞ்சினார் (இறைவனடி சேர்ந்தார்) என்பது மங்கல வழக்கு.
* தஞ்சாவூரைத் தஞ்சை என வழங்குவது மரூஉ
* விளக்கைக் குளிரவை என்பது மங்கல வழக்கு.
* கள்ளைச் சொல் விளம்பி என்று கூறுவது குமூஉக்குறி
* கால்கழுவி வந்தேன் என்று கூறுவது இடக்கரக்கடல்
* காலங்கரந்த பெயரெச்சம் வினைத்தொகை
* தொகைநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும்.
மல்லிகைப் பூ - என்பதில் மல்லிகை என்பது சிறப்புப் பெயர். பூ என்பது பொதுப்பெயர்.
வளப்பிறை என்பது வினைத்தொகை. செம்மொழி என்பது பண்புத்தொகை
கயல்விழி என்பது உவமைத்தொகை. மா, பலா, வழை என்பது உம்மைத்தொகை.
பவளவாய் பேசினாள் என்பது அன்மொழித்தொகை.

* முற்று ஈரெச்சம் எழுவாய் விளிப்பொருள் ஆறுருபு இடையுரி அடுக்கிவை தொகாநிலை
* தொகாநிலைத்தொடர் ஒன்பது வகைப்படும்.
* மற்றுப்பிற என்னும் தொடரில் "மற்று"  என்பது இடைச்சொல்
* சாலப்பகிர்ந்து என்பது உரிச்சொல் தொடர். கூடிப் பேசினார் என்னும் தொடர் பெயரெச்சத்தொடர் ஆகும்.
* கண்ணா வா! விளித்தொடர். வந்தான் இராமன்-வினைமுற்று தொடர். உடைந்த நாற்காலி பெயரெச்சத் தொடர். வந்து நின்றான் - வினையெச்சத் தொடர், கபிலன் வந்தான் - எழுவாய்த் தொடர், வீட்டை கட்டினான்-வேற்றுமைத்தொகாநிலைத் தொடர்.
* ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.
* சினையின் பெயர் முதலுக்கு ஆகிவருவதை சினை ஆகு பெயர்.
* முதல் பொருளின் பெயர் சினைக்கு ஆகி வருவதை பொருளாகு பெயர் (முதலாகு பெயர்) என்று கூறுவர்.
* ஊர் திரண்டது என்னும் தொடரில் அமைந்துள்ள ஆகுபெயர் - இடவாகு பெயர்.
* வெற்றிலை நட்டான் என்னும் தொடர் சினையாகு பெயர்.
* இடத்தின் பெயர் அந்த இடத்தோடு தொடர்புடைய வேறு ஒரு பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.
* காலப்பெயர் அக்காலத்தோடு தொடர்புடைய வேறஉ ஒரு பொருளுக்கு ஆகிவருவது காலவாகு பெயர். எ.கா. டிசம்பர் பூ.
* செவலையை வண்டியில் பூட்டு என்னும் தொடர் பண்பாகு பெயர்.
* பண்பாகு பெயரை குணவாகு பெயர் எனவும் வழங்குவர் (நீலம் சூடினாள்).
* வறுவல் தின்றான் என்பது தொழிலாகு பெயர். தொழில் பெயர் தொழிலைக் குறிக்காமல் அத்தொழிலால் ஆகும் உணவைக் குறிப்பது தொழிலாகு பெயர்.
* அளவைக் குறிக்கும் பெயர்களை அளவைப்பெயர்கள் என்பர்.
* அளவைப்பெயர்கள் நான்கு வகைப்படும்.
* எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய பொருளுக்கு பெயராகி வருவது எண்ணலளவை ஆகுபெயர். (ஒன்றஉ பெற்றால் ஒளிமயம்)
* எடுத்தல் அளவைப் பெயர். அவ்வளவைக் குறிக்காமல் அவ்வளவுடைய பொருளுக்கு (அரிசி, பருப்பு) ஆகி வருவது எடுத்தலளவை ஆகுபெயர். (ஐந்து கிலோ என்ன விலை)
* முகத்தில் அளவைப் பெயர். அவ்வளடைய பொருளுக்கு பெயராகி வருவது முகத்தலளவை ஆகுப்பெயர். (நான்கு லிட்டர் கொடு)

* நீட்டல் அளவை பெயருக்குச் சான்று மூன்று மீட்டர் கொடு.
* வள்ளுவர் சொல் வாழ்க்கைக்கு இனிது இத்தொடர் சொல்லாகு பெயர்.
* தயிரை இறக்கு இத்தொடர் தானியாகு பெயர்.
* தானம் தானிக்கு ஆகி வருவது இடவாகு பெயர்.
* தானி (பொருள்) தானிகு ஆகி வருவது கருவியாகு பெயர்.
* கருவிப்பொருள் காரியத்திற்கு ஆகி வருவது கருவியாகு பெயர்.
* காரியப் பொருள் கருவிக்கு ஆகி வருவது காரியவாகு பெயர் (எ.கா. வீணைகேட்டு மெய்ம் மறந்தேன்)
* திருவள்ளுவரைப் படித்துப்பார். இத்தொடர் கருத்தாவாகு பெயர்.
* நாரதர் வருகிறார். இத்தொடர் உவமையாகு பெயர்.
* ஒன்றன் பெயரான் அதற்கியை பிறிதைத் தொன்முறை உரைப்பன ஆகுபெயரே. வழாநிலை, வழு, வழுவமைதி

* இலக்கண முறைப்படி குற்றமில்லாது பேசுவதும், எழுதுவதும் வழாநிலை. வழாநிலை அறுவகைப்படும்.
* அரசன் வந்தான், மாடு வந்தது - திணை வழா நிலை
* கண்ணன் வந்தான், நாய் ஓடியது - பால் வழா நிலை
* நான் வந்தேன் , நீ வருவாய் - இடவழா நிலை
* நாளே வருவேன், நேற்றுப் படித்தேன் - கால வழா நிலை
* தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் - வினா வழா நிலை
* தமிழ்நாட்டின் தலைநகரம் எது? என்னும் வினாவிற்கு சென்னை என விடையளித்தல் - விடை வழா நிலை.
* இலக்கண முறையின்றிப் பேசுவதும், எழுதுவதும் வழு எனப்படும். வழு ஏழு வகைப்படும்.
* என் மாமா வந்தது திணை வழு, கபிலன் பேசினான் பால் வழு, நாங்கள் வந்தார்கள் - இட வழு, கமலா நாளை வந்தாள் - கால வழு, முட்டையிட்டது சேவலா, * பெட்டையா? வினாவழு, நாளை பள்ளி திறக்கப்படுமா? என்ற வினாவிற்கு என் மாமாவிற்கு உடல் நலமில்லை எனக் கூறுவது - விடை வழு, நாய் கத்தும் - மரபு வழு.
* இலக்கண முறையில்லா விடினும் இலக்கணமுடையதாக ஏற்றுக்கொள்வது வழுவமைதி
* பசுவைப் பார்த்து என இலட்சுமி வந்துவிட்டான் எனக் குறுவது - திணைவழுவமைதி.
* குடியரசு தலைவர் நாளை தமிழகம் வருகிறார் - இத்தொடர் காலவழுவமைதி
* பெயர்ச்சொல்லைக் கருத்தாவாக மாற்றுவது மூன்றாம் வேற்றுமை.
* கிழமைப் பொருளில் வருவது ஆறாம் வேற்றுமை.
* இராமனுக்குத் தம்பி இலக்குவனன். இதிலுள்ள வேற்றும் உருபு முறை பொருளில் வந்துள்ளது.
* கருவி கருத்தா ஆகிய பொருள்களில் வரும் உருபு ஆல், ஆன்.
* ஐந்தாம் வேற்றுமையில் "இல்" உருபு ஒப்பு, ஏது, நீக்கல் பொருள்களில் வரும்.
* ஏழாம் வேற்றுமையில் இல் உருபு இடப்பொருளில் வரும்.
* படர்க்கைப் பெயரை முன்னிலைப் பெயராக்கி அழைக்க எட்டாம் வேற்றுமை பயன்படுகிறது.

தொடரும்....

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot